Senthiratha Tamizhosai
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
“செந்திறத்த தமிழோசை…..”
1) தமிழில் அமைந்துள்ள எழுத்துக்கள் 247. உயிரெழுத்து 12. மெய்யெழுத்து 18. உயிர் மெய்யெழுத்து 216. ஆய்த எழுத்து 1. ஆக மொத்தம் 247.
2) ஆழ்வார்கள் திருவரங்கனுக்கு மங்களாசாஸனமாக அருளிச் செய்த பாசுரங்களும் 247. பொய்கை யாழ்வார்-1, பூதத்தாழ்வார்-4, பேயாழ்வார்-2, திருமழிசையாழ்வார்-14, நம்மாழ்வார்-12, குலசேகராழ்வார்-31, பெரியாழ்வார்-35, ஆண்டாள்-10, தொண்டரடிப்பொடியாழ்வார்-55, திருப்பாணாழ்வார்-10, திருமங்கையாழ்வார்- 73. ஆக மொத்தம்-247 பாசுரங்கள்.
3) பூதத்தாழ்வார்-“இருந்தமிழ் நன்மாலை பாடிய பெருந்தமிழன்” என்றும்(இரண்டாம் திருவந்தாதி-74), நம்மாழ்வார்-“என் நெஞ்சத் துள்ளிருந்து இங்கு இருந்தமிழ்நூல் இவை மொழிந்து” என்றும் (திருவாய்மொழி 10-6-4), திருமங்கையாழ்வார்-தம்முடைய பெரியதிருமொழி பாசுரங்களை “செஞ்சொல்மாலை” என்றும் (பெரிய திருமொழி 1-7-10) கூறிக் கொள்கின்றனர்.
4) இன்தமிழ் (பெரியாழ்வார் திருமொழி 3-2-10), ஒண்தமிழ் (பெரியாழ்வார் திருமொழி 3-6-10), கோவை இன்தமிழ் (பெரியதிருமொழி 9-10-9), ஞானத்தமிழ் (2ஆம் திருவந்தாதி 1), சங்கத்தமிழ் (திருப்பாவை-30), சீரார்ந்த தமிழ் (பெருமாள் திருமொழி 9-11), தண்டமிழ் (திருமங்கையாழ்வார் 2-2-10), நற்றமிழ் (பெருமாள் திருமொழி 5-10), பண்ணார் தமிழ் (திருவாய்மொழி 9-8-11), பாவளரும் தமிழ் (பெரியதிருமொழி 8-1-10), வண்டமிழ் (திருவாய்மொழி 4-5-10), வியன்தமிழ் (பெரியாழ்வார் திருமொழி 5-1-10), தூய தமிழ் (நாச்சியார் திருமொழி 6-11), செந்திறத்த தமிழ் (திருநெடுந்தாண்டகம்-4) என்றெல்லாம் ஆழ்வார்கள் தமிழைப் போற்றிப் பாடியுள்ளனர்.
5) மார்கழி மாதம் முழுவதும் பெரியபெருமாள் விச்வரூப ஆராதனம் கண்டருளும் போது அரையர்களின் திருப்பாவை விண்ணப்பத்தைத் தவிர வேறு வடமொழி மந்திரங்களைக் கொண்டு ஆராதனம் செய்யப் படுவதில்லை. இது தமிழுக்கே அமைந்த ஏற்றமாகும்.
6) பெரியதிருநாள் எனப்படும் பகல்பத்து, இராப்பத்து திருநாட்கள் தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்திடும் ஒரு மாபெரும் விழாவாகும். ஆழ்வார்கள், ஆசார்யர்கள், நித்யசூரிகள், முமூக்ஷûக்கள் ஆகியோர் புடைசூழ பரமபதத்தில் நாலாயிரத்தைக் கேட்டு மகிழும் விழாவே நாம் காணும் அத்யயன உத்ஸவம்.
7) திருமங்கையாழ்வார் தம் வாழ்நாளின் பின்பகுதியை திருவரங்கத்தில் பல கைங்கர்யங்களை மேற் கொண்டு இங்கேயே எழுந்தருளியிருந்தார்.
ஆழ்வார்களில் சிந்தையாலும், சொல்லாலும், செய்கையாலும் பெரியபெருமாளுக்குத் தொண்டு புரிந்தவர்கள் இருவர். முதலாமவர் குலசேகராழ்வார். இரண்டாமவர் திருமங்கையாழ்வார்.
9) ஒரு கார்த்திகைத் திருநாளில் அழகியமணவாளன் நாச்சிமார்களுடன் திருமஞ்சனம் கண்டருளியபிறகு திருமங்கைமன்னன் திருநெடுந்தாண்டகம் என்கிற பிரபந்தத்தை தேவகானத்தில் பாடி மகிழ்வித்தார். அதன்பிறகு திருவாய்மொழி பாசுரங்கள் கொண்டு அழகியமணவாளனை உகப்பித்தார் திருமங்கையாழ்வார்.
10) இதனால் பெரும் மகிழ்ச்சி கொண்ட அழகியமணவாளன் “ஆழ்வார் நாம் உமக்கு என் செய்ய வேண்டும்?” என்று வினவினார்.
11) அதற்குத் திருமங்கையாழ்வார் “நாயிந்தே மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடங்கி கொண்டாடப் படும் வேதத்திற்கான ஏற்றமிகு விழாவில் வேதங்களுடனே சடகோபன் அருளிச்செய்த திருவாய்மொழியையும் கேட்டு வடமொழி வேதத்திற்கு நிகரானதொரு பெருமையைத் திருவாய்மொழிக்குத் தந்தருள வேணும்”என்று விண்ணப்பித்தார்.
12) அழகியமணவாளனும் பெரிதும் உவகையுற்று தேவகானத்தில் பாடியதால் திருமங்கையாழ்வார் திருமிடர் நோவும் என்று அவர் தொண்டையிலே தைலக்காப்பைத் தடவச்செய்து நம்மாழ்வாரை திருக்குரு கூரிலிருந்து அழைத்து வருவதற்கான ஸ்ரீமுகப்பட்டயம், மாலை பரியட்டம், சந்தனம் ஆகியவற்றை அனுப்பி கௌரவித்தார். (தொடரும்)








tirumanjanam SundaraRajan 2:18 pm on December 24, 2009 Permalink |
Just discovered it thro Srirangapankajam. Excellent service this ! I have already requested you personally that this series of “periya tirunaal” notes could be issued as a booklet !