Posted by: srivaishnavan on: November 15, 2008
சீர் திருவரங்கா போற்றி
ஆர் திரு உறையூர் அன்பா போற்றி
பொழிலார் கரம்பனூர் புயலே போற்றி
எழிலார் திருவெள்ளறையாய் போற்றி
இஞ்சி சூழ் அன்பில் ஈசா போற்றி
தஞ்சை மாமணித் தளியாய் போற்றி
புள்ளம் பூதங்குடியாய் போற்றி
நள்ளம் திருப்பேர் நம்பீ போற்றி
ஆதனூர் எழுந்தருள் ஸ்ரீதரா போற்றி
Posted by: srivaishnavan on: November 10, 2008
வார்த்தாமாலையினைத் தொகுத்தவர் பின்பழகிய பெருமாள் ஜீயர் .இவர் ஐப்பசி சதயத்தில் அவதரித்தவர், ,திருக்கலிகன்றிதாசரென்கிற நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமானவர்.இந்த நூலில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் தத்வஹித புருஷார்த்தங்கள் பற்றியும் , ரஹஸ்யத்ரயம் ,அர்த்தபஞ்சகம் முதலானவை பற்றியும் பல பூர்வாசார்யர்களின் விளக்கங்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்னூலில் 456 வார்த்தைகள் உள்ளன.இவற்றின் பொருளை சாமான்ய மக்கள் அறிந்து கொள்வது கடினம்.அதற்கான எளிய நடை விவரணத்தைப் புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார் எழுதியுள்ளார்.அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறோம்.
92 ஆம் வார்த்தை – பட்டினிப்பெருமாளும் திருடர்களும்
உடையவர் காலத்தில் யோகிகளைப் [...]